மதுராந்தகம்: மதுராந்தகம் அருகே இளநீர் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. உடுமலைப்பேட்டையில் இருந்து சென்னைக்கு இளநீர் ஏற்றி சென்ற லாரி மதுராந்தகம் அருகே ஒழுப்பாக்கம் பகுதி தேசிய நெடுஞ்சாலையில் நிலைத்தடுமாறி எதிர் திசையில் உள்ள மின் கம்பத்தின் மீது மோதி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில், லாரி டிரைவர் படுகாயம் அடைந்தார். இந்த விபத்து குறித்து மதுராந்தகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மதுராந்தகம் அருகே இளநீர் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து
previous post