சென்னை: மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டால் வெற்றி பெற வாய்ப்புள்ளோர் விவரங்களை எடப்பாடி பழனிசாமி கேட்டுள்ளார். பட்டியலை அளிக்க அதிமுக மாவட்டச் செயலாளர்களுக்கு பொதுச்செயலாளர் ஈபிஎஸ் அறிவுறுத்தியுள்ளார். சென்னை ராயப்பேட்டையில் அதிமுக மாவட்டச் செயலாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில் ஆலோசனை நடைபெறுகிறது.