சென்னை: தேர்தல் நடைபெறுவதற்கு முன் காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகளை பாஜக அரசு முடக்கி உள்ளது என ப.சிதம்பரம் குற்றசாட்டு வைத்துள்ளார். நாட்டின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் மிகப்பெரிய எதிர்க்கட்சியாக காங்கிரஸ் உள்ளது. பொருளாதார ரீதியாக காங்கிரஸை முடக்கும் பாஜகவின் போலி முயற்சிகளே தவிர, வேறொன்றும் இல்லை. மக்களவை தேர்தலில் பாஜகவுக்கு மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள் என நாங்கள் நம்புகிறோம். பொருளாதார ரீதியாக காங்கிரஸை முடக்கும் பாஜகவின் போலி முயற்சிகளே தவிர, வேறொன்றும் இல்லை என அவர் தெரிவித்தார்.