புதுக்கோட்டை: விராலிமலை அருகே மலைக்குடிப்பட்டியில் உள்ள டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து ரூ.4.83 லட்சம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. நள்ளிரவில் டாஸ்மாக் கடைக்குள் புகுந்த மர்மநபர்கள் லாக்கரில் இருந்த ரூ.4.83 லட்சத்தை கொள்ளையடித்துச் சென்றனர். கொள்ளை தொடர்பாக இலுப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.