புதுடெல்லி: டெல்லியில் சிறுமியை கடித்து குதறிய அமெரிக்க இன நாயின் உரிமையாளர் மீது போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். டெல்லியின் நெப் சராய் பகுதியில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் 17 வயது சிறுமி ஒருவர், கடந்த மார்ச் 29ம் தேதி மொட்டை மாடிக்கு சென்றார். அடுக்குமாடி குடியிருப்பின் மற்றொரு குடியிருப்பாளரான மான் சிங் (60) என்பவர், தனது செல்ல நாயுடன் (அமெரிக்க புல்லி இன நாய்) மொட்டை மாடியில் அமர்ந்திருந்தார்.
சிறுமியை பார்த்ததும் அந்த நாய் அவரை தாக்க முயன்றது. அடுத்த சில நிமிடங்களில் அந்த சிறுமியை கடித்து குதறியது. அதையடுத்து சிறுமியின் பெற்றோர், அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். தகவலறிந்த போலீசார், பாதிக்கப்பட்ட சிறுமி கொடுத்த புகாரின் அடிப்படையில் செல்லப்பிராணி உரிமையாளரான மான் சிங் மீது ஐபிசி பிரிவு 289-யின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.