Saturday, July 27, 2024
Home » இதழ்களுக்கான இயற்கையான டிப்ஸ்!

இதழ்களுக்கான இயற்கையான டிப்ஸ்!

by Porselvi

முகத்திற்கு அழகு தருவதில் உதடுகளுக்கு முக்கிய பங்கு உண்டு.
*செயற்கை ஊசிகள், க்ரீம்களை பயன்படுத்தி உதட்டை கெடுத்து கொள்ளாதீர். வீட்டில் உள்ள பொருட்களை வைத்து இதழ்களை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளலாம்.
*தினமும் காலையில் பற்களை துலக்கியபின் சிறிது பேக்கிங் சோடாவை வைத்து உதட்டின்மீது மென்மையாக தேய்த்து வந்தால் உதடுகள் வறட்சியடையாமல் மென்மையாக இருக்கும்.
*உதட்டில் சிறிது தேன் (அ) ஆமணக்கெண்ணெய் தேய்த்து வந்தால் உதடுகள் எப்போதும் ஈரப்பசையுடன் காணப்படும்.
*வறட்சியின் காரணமாக இரவில் படுக்கும் முன் வாசலின் தடவுபவர்கள் வாசலின் தடவும் முன் அன்னாசிப் பழ ஜூஸை தடவி பின்னர் வாசலினை தடவுங்கள்.
*க்ரீன் டீ செய்து குடித்த பின்னர் அதில் இருக்கும் இலையை உதட்டில் தடவி சிறிது நேரம் ஊறவைத்து பின்னர் கழுவினால் உதடுகள் எப்போதும் வறட்சியடையாமல் இருக்கும்.
*உதட்டில் இருக்கும் இறந்த செல்களை நீக்க ஆலிவ் எண்ணெயுடன் சர்க்கரையை கலந்து அதனை உதட்டில் தடவி சிறிது நேரம் தேய்த்து பின் கழுவ வேண்டும்.
*தக்காளியின் பேஸ்ட்டை மில்க் க்ரீமுடன் கலந்து உதட்டிற்கு தடவினால் உதடுகள் மென்மையாகும். பிங்க் நிறத்தை அடையும்.
* ரோஸ் இதழ்களை மில்க் க்ரீமுடன் கலந்து தடவினால் எப்போதும் லிப்ஸ்டிக் போல் இருக்கும்.
*பாதாமை நன்கு பேஸ்ட் செய்து அதனை உதட்டில் தடவி வந்தால் உதடுகள் மென்மையாகக் காணப்படும்.
*தேங்காய் எண்ணெயுடன் எலுமிச்சைச் சாறு மற்றும் தேன் மெழுகை ஊற்றி காயவைத்து அதனை காற்று புகாத டப்பாவில் போட்டு, அந்த கலவையை தடவினால் உதடுகள் மென்மையாக இருக்கும். ஈரப்பதமாகவும் இருக்கும்.
*தினமும் எட்டு முதல் பத்து டம்ளர் தண்ணீரை அருந்த வேண்டும். உடலில் தண்ணீர் குறைவாக இருப்பதால்தான் உதடுகள் வறட்சியடைகின்றன. மேலும் ஊட்டச் சத்துள்ள உணவுகளையும், பழங்களையும் எடுத்துக்கொள்வது நல்லது. ஈஸ்ட் நிறைய பிஸ்கட்கள், மது, புகை இவைகளும் கூட உதடுகள் கறுப்பாகக் காரணமாக அமையும். ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு முதல் முகவரி இந்த இதழ்கள்தான் கொடுக்கும் .
– ஜெ.ரவிக்குமார்

You may also like

Leave a Comment

10 + nineteen =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi