புதுடெல்லி: மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தனது டிவிட்டர் பதிவில், ‘‘இந்திய மக்களாகிய நாம் வெறுப்பு, கொள்ளை, வேலையின்மை விலைவாசி உயர்வு மற்றும் அராஜகம் உள்ளிட்டவற்றுக்கு எதிராக ஒன்றிணைந்து போராட வேண்டும். 2024 மக்களவை தேர்தல் இந்தியாவிற்கான நீதிக்கான கதவை திறக்கும். கை ( காங்கிரஸ் சின்னம்) நிலைமையை மாற்றும். இது சர்வாதிகாரத்திடம் இருந்து நாட்டின் ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பை காப்பாற்றுவதற்கான கடைசி வாய்ப்பாகும்”என்று பதிவிட்டுள்ளார்.
சர்வாதிகாரத்திடம் இருந்து ஜனநாயகத்தை காப்பதற்கான கடைசி வாய்ப்பு: கார்கே
previous post