சென்னை: மொழிப்பாடங்களில் அனைத்து பல்கலைக்கழகங்களிலும் ஒரே மாதிரியான பாடத்திட்டம் கொண்டுவரப்படும் என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். பல்கலைக்கழகங்களில் தேவைப்பட்டால் பாடத்திட்டத்தில் 25 சதவீதம் மாற்றம் செய்யலாம். மாணவர்கள் படிக்கும் போது வேலைவாய்ப்பு அளிப்பது தான் நான் முதல்வன் திட்டம். அனைத்து பல்கலைக்கழகங்களிலும் பட்டப்படிப்பு தேர்வு முடிவுகளை ஒரே நாளில் அறிவிக்கவும் முடிவு செய்யப்பட்டிருப்பதாக அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.