ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள பர்டகை பகுதியில் நிலமோசடியில் ஈடுபட்ட விவகாரத்தில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் ஹேமந்த் சோரன் கடந்த ஜனவரி 31ம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஹேமந்த் சோரனின் ரூ.31 கோடி மதிப்பிலான 8.8 ஏக்கர் நிலத்தை அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று பறிமுதல் செய்தனர்.