மதுரை: நில நிர்வாக ஆணையர் மற்றும் மதுரை ஆட்சியர் சங்கீதாவுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு முடித்து வைக்கப்பட்டது. நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நில அளவை ஆணையர் நாகராஜன், மதுரை ஆட்சியர் சங்கீதா நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர். நில அளவை ஆணையர் மற்றும் ஆட்சியர் தரப்பு விளக்கத்தை ஏற்று நீதிமன்ற அவமதிப்பு வழக்கு முடித்து வைக்கப்பட்டது. பட்டா வழங்க ஆணையிட்டதை செயல்படுத்தாததால் 2 பேர் மீதும் நீதிமன்றம் தாமாக முன்வந்து அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது.