சென்னை: பள்ளிக்காக வழங்கிய நில ஒப்பந்தத்தை புதுப்பிக்குமாறு கர்நாடக சங்கம் விடுத்த கோரிக்கையை பரிசீலிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கர்நாடக சங்கம் தொடர்ந்த வழக்கில் சென்னை மாநகராட்சிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. சென்னை தியாகராயர் நகரில் கர்நாடக சங்கம் பள்ளி நடத்த மாநகராட்சி வழங்கிய நிலத்தின் குத்தகை 2019ல் நிறைவுபெற்றது.
குத்தகை முடிந்ததால் நிலத்தை திரும்ப ஒப்படைப்பது பற்றிய விசாரணைக்கு ஆஜராக சென்னை மாநகராட்சி நோட்டீஸ் வழங்கியது. சென்னை மாநகராட்சி அனுப்பிய நோட்டீசை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் கர்நாடக சங்கம் வழக்கு தொடர்ந்தது. குத்தகை பாக்கி முழுவதையும் செலுத்திவிட்டதால் குத்தகையை புதுப்பிக்க வேண்டும் என்று கர்நாடக சங்கம் வலியுறுத்தியது. சென்னை மாநகராட்சி முடிவெடுக்கும் வரை தற்போதுள்ள நிலையே தொடர வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.