நெல்லை: நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தனசிங் உடலுக்கு பிரேத பரிசோதனை தொடங்கியது. நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஜெயக்குமார் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. ஜெயக்குமார் தனசிங் உடல் பிரேத பரிசோதனை முழுவதும் வீடியோ பதிவு செய்யப்படுகிறது. கரைச்சுத்து புதூரில் வீட்டின் பின்புற தோட்டத்தில் பாதி எரிந்த நிலையில் ஜெயக்குமார் தனசிங் சடலமாக மீட்கப்பட்டார்.