சென்னை: குறுவை விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.35,000 வழங்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். பருவமழை பொய்த்த மாவட்டங்களை வறட்சி மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும். சம்பா சாகுபடி விவசாயிகளுக்கு காப்பீட்டு நிறுவனங்கள் மூலம் முழுமையான இழப்பீட்டை பெற்றுத் தர வேண்டும் என்றும் பழனிசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.