கடலூர்: கடலூர் அருகே முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ. மகன் இளையராஜா கொலை முயற்சி வழக்கில் மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டனர். ஏற்கனவே 8 பேர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் மேலும் 4 பேர் கைது; 5 கள்ளத்துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டது. அழகேஸ்வரன், அன்பரசன், ரமேஷ், செந்தில்குமார் ஆகிய நால்வரை போலீசார் கைது செய்தனர். கடந்த 8ம் தேதி ஒரு கும்பல் துப்பாக்கியால் சுட்டதில் இளையராஜா காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.