கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே தளி ஏரியில் இரண்டு காட்டு யானைகள் தஞ்சமடைந்துள்ளன. வனப்பகுதியிலிருந்து வெளியேறி ஏரியில் முகாமிட்டுள்ள யானைகளை வனத்துறையினர் தொடர் காண்காணித்து வருகின்றனர். விளைநிலங்களில் யானைகள் புகுந்துவிடும் முன்னதாக வனப்பகுதிக்குள் விரட்ட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.