அண்ணாநகர்: சென்னை கோயம்பேடு மார்க்கெட் அருகே வாலிபர் ஒருவர் கஞ்சா பொட்டலங்களுடன் சுற்றிவருவதாக கிடைத்த தகவல்படி, இன்ஸ்பெக்டர் பரணிதரன் தலைமையில் போலீசார் விரைந்தனர். அங்கு கஞ்சாவுடன் சுற்றித்திரிந்த வாலிபரை கைது செய்து பேண்ட் பாக்கெட்டில் சோதனை செய்தபோது கஞ்சா வைத்திருப்பது தெரியவந்தது.
அவரை கைது செய்து நடத்திய விசாரணையில், மதுரவாயல் பகுதியை சேர்ந்த உதயா(எ) உதயகுமார்(34) என்பதும் வானகரம் பகுதியில் உள்ள மீன் மார்க்கெட்டில் வேலை செய்துவருவது தெரிய வந்தது. இவரிடம் இருந்து 150 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து பின்னர் அவரை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.