சென்னை: கொளத்தூர், துறைமுகம், எழும்பூர், திரு.வி.க.நகர் தொகுதிகளில் கனமழையால் பாதிக்கப்பட்ட 12,000 குடும்பங்களுக்கு நிவாரண உதவிகளை இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நேற்று வழங்கினார். எழும்பூர் தொகுதிக்குட்பட்ட மெக் நிக்கல் சாலை, சர்வோதயா காப்பகத்தில் உள்ள பெண்களுக்கும், புதிய பூபதி நகர், ஓசங்குளம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு ஆகிய பகுதிகளில் வசிக்கும் 3,000 குடும்பங்களுக்கும், திருநங்கைகளுக்கும் நிதி உதவிகளை அமைச்சர் வழங்கினார். துறைமுகம் தொகுதிக்குட்பட்டத டி.என்பி.எஸ்.சி சாலை, நாராயணப்பா சாலை, என்.எஸ்.சி.போஸ் சாலை, தேவராஜ் முதலியார் தெரு, மெமோரியல் ஹால் ஆகிய பகுதிகளில் பாதிக்கப்பட்ட 4,000 குடும்பங்களுக்கும், மாநகராட்சி 60-வது வார்டை சேர்ந்த பிராட்வே, ஜாபர் ஜெராங் தெருவில் வசிக்கும் 1,000 குடும்பங்களுக்கும் நிவாரணப் பொருட்கள் மற்றும் நிதி உதவிகளை வழங்கினார்.
பின்னர் திரு.வி.க.நகர் சட்டமன்ற தொகுதிக்குட்ப்பட்ட மாநகராட்சி வார்டு எண் 74-ஐ சேர்ந்த 1,000 குடும்பங்களுக்கும், வார்டு எண் 71-ஐ சேர்ந்த 1,000 குடும்பங்களுக்கும், கொளத்தூர் சட்டமன்ற தொகுதி, மாநகராட்சி வார்டு எண் 66-ஐ சேர்ந்த வெற்றிநகர் பகுதியில் 1,000 குடும்பங்களுக்கும், வார்டு எண் 69-ஐ சேர்ந்த அகரம் பகுதியில் 1,000 குடும்பங்களுக்கும் நிவாரணப் பொருட்கள் மற்றும் நிதி உதவிகளை வழங்கினார். இந்நிகழ்ச்சிகளில் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன், மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், திரு.வி.க. நகர் சட்டமன்ற உறுப்பினர் தாயகம் கவி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ரவிச்சந்திரன், மண்டலக் குழுத்தலைவர் சரிதா மகேஷ்குமார், மாமன்ற உறுப்பினர்கள் இளம்சுருதி, ராஜேஸ்வரி ஸ்ரீதர், சுந்தர்ராஜன், பரிமளம், புனிதவதி,நாகராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.