நீலகிரி: கோடநாடு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு சிபிசிஐடி போலீசார் மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளனர். செல்போன்கள் ஆய்வு செய்யப்பட்டு 8000 பக்க அறிக்கை கடந்த வாரம் சிபிசிஐடியிடம் வழங்கப்பட்டது. குற்றம் சாட்டப்பட்டவர்களின் செல்போன் உரையாடல் விவரங்கள் தரப்பட்ட நிலையில் சம்மன் அனுப்பப்பட்டிருக்கிறது. வரும் 11ம் தேதியில் இருந்து விசாரணைக்கு ஆஜராகும்படி சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.