புதுக்கோட்டை: கொடநாடு விவகாரத்தில் உண்மை குற்றவாளிகள் விரைவில் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என சிறைத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். எந்த உயர் பதவியில் இருந்தவர்களாக இருந்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என புதுக்கோட்டையில் சிறைத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறினார்.