Saturday, June 1, 2024
Home » கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு மாஜி ஐபிஎஸ் அதிகாரி மகனிடம் விசாரணை

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு மாஜி ஐபிஎஸ் அதிகாரி மகனிடம் விசாரணை

by MuthuKumar

கோவை: கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி மகனிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர். நீலகிரி மாவட்டம் கொடநாடு எஸ்டேட்டில் ஜெயலலிதா மற்றும் சசிகலாவுக்கு சொந்தமான பங்களாவில் 2017ம் ஆண்டு நடந்த கொலை, கொள்ளை சம்பவம் தொடர்பாக சயான், வாளையார் மனோஜ் உள்பட கேரளாவை சேர்ந்த 10 பேரை கோத்தகிரி போலீசார் கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு ஊட்டி கோர்ட்டில் நடந்து வருகிறது.

இவ்வழக்கில் சிபிசிஐடி இந்த வழக்கில் மாஜி ஐபிஎஸ் அதிகாரியின் மகனுக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். கனகராஜ் ஆத்தூரில் விபத்தில் சிக்கியபோது அவ்வழியாக காரில் சென்று கொண்டிருந்த மாஜி ஐபிஎஸ் அதிகாரி ஞானசம்பந்தன் (92), அவசர உதவி மையத்துக்கு தகவல் தெரிவித்து உதவி உள்ளார். அதன் அடிப்படையில் சிவக்குமாரை கோவை சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர்.

அதன்படி நேற்று காலை 10.30 மணிக்கு சிவக்குமார் கோவை பிஆர்எஸ் அலுவலகத்தில் சிபிசிஐடி விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் சிபிசிஐடி ஏடிஎஸ்பி முருகவேல் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். சிவக்குமார் விபத்தை பார்த்து அவசர உதவி மையத்துக்கு தகவல் தெரிவித்தது தொடர்பாக அவரிடம் பல்வேறு கேள்விகளை கேட்டு விசாரணை நடத்தினர். அவர் கொடுக்கும் தகவலை பொறுத்து அடுத்த கட்ட விசாரணை நடைபெறும் என சிபிசிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர்.

You may also like

Leave a Comment

13 − nine =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi