ஈரோடு: மகளிர் உரிமை தொகையை கொச்சைப்படுத்தி பேசிய நடிகை குஷ்பு மீது ஈரோடு மாவட்டம் பவானி காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மகளிர் உரிமை தொகை குறித்து அவதூறாக பேசிய குஷ்பு மீது உரிய நடவடிக்கை எடுக்க பவானி நகராட்சி தலைவர் சிந்தூரி புகார் அளித்துள்ளார். மகளிர் உரிமை தொகையை கொச்சைப்படுத்தி பேசிய குஷ்புவுக்கு தமிழ்நாடு முழுவதும் கண்டனம் எழுந்துள்ளது. குஷ்புவை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் பெண்கள் 3-வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.