சேலம்: பெங்களூருவில் இருந்து ஆத்தூருக்கு கடத்த முயன்ற 500 கிலோ குட்காவை சேலம் போலீசார் பறிமுதல் செய்தனர். கர்நாடகாவில் இருந்து சேலம் வழியாக குட்கா கடத்தப்படுவதாக கிடைத்த தகவலை அடுத்து போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். கடத்தலில் ஈடுபட்ட ராஜஸ்தானை சேர்ந்த லட்சுமணனை போலீசார் கைது செய்த நிலையில் தப்பிய மேலும் ஒருவருக்கு வலை வீசப்படுகிறது.