கேரளாவின் அறுவடை திருநாள் என்று அழைக்கப்படும் ஓணம் பண்டிகை, மலையாள மொழி பேசும் மக்களால் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதிகாலையிலேயே மக்கள் பாரம்பரிய உடைகளை உடுத்தி குடும்பத்துடன் கோயில்களுக்கு சென்று வழிபட்டு ஓணம் திருநாளை வரவேற்றனர். தலைநகரம் திருவனந்தபுரம் உள்ளிட்ட அனைத்து நகரங்களிலும் உள்ள கோயில்கள் விழாக்கோலம் பூண்டுள்ளன. கொச்சியில் புகழ் பெற்ற வாமன மூர்த்தி கோயிலில் மக்கள் வரிசையில் நின்று வழிபாடு செய்தனர்.
விதவிதமான உணவு.. வீடுகளில் அத்தப்பூ கோலம்: கேரளா முழுவதுமே ஓணம் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்..!!
previous post