கோவை: கோவையில் இருந்து பொள்ளாச்சி நோக்கி சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து டெம்போ மீது மோதிய விபத்தில் தந்தை, மகன் உயிரிழந்துள்ளனர். பொள்ளாச்சி அருகே உள்ள மண்ணூரை சேர்ந்த பரமேஸ்வரன் (48) மனைவி மற்றும் மகனுடன் சென்றுகொண்டிருந்தபோது, கட்டுப்பாட்டை இழந்து டெம்போ மீது கார் மோதியதாக தகவல் தெரிவித்துள்ளனர். விபத்தில் பரமேஸ்வரன் மனைவி படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி அளித்துள்ளனர்.