திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கண்ணூர் அருகே ஏழிமலையில் கடற்படை வீரர்கள் பயிற்சி மையம் உள்ளது. இந்தநிலையில் நேற்று முன்தினம் இங்குள்ள நுழைவாயிலை தாண்டி ஒரு வாலிபர் அனுமதி இல்லாமல் உள்ளே செல்ல முயற்சித்தார். உடனே பாதுகாப்புப் படை வீரர்கள் விரைந்து சென்று அவரை பிடித்து விசாரித்தனர்.
இதில் அவரது பெயர் முகம்மது முர்த்தாசா என்றும், காஷ்மீர் பாராமுல்லா பகுதியை சேர்ந்தவர் என்றும் தெரியவந்தது. மும்பையில் ஒரு கல்லூரியில் படித்து வருவதாக அவர் கூறினார். இது குறித்து பையனூர் போலீசுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் அந்த வாலிபரை கைது செய்து தீவிர விசாரணை நடத்தினர். இதன்பின் அவர் பையனூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.