ஸ்ரீநகர் : ஜம்மு – காஷ்மீர் மாநிலம் ரஜோரி மாவட்டம் மாவட்டம் டசல் மிஹரி கிராமத்தில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டை நடத்தியபோது, அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர். பாதுகாப்பு படையினரும் பதிலடி தாக்குதல் நடத்தினர். இதில் பயங்கரவாதி ஒருவன் சுட்டுக் கொல்லப்பட்டான்.