கரூர்: கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கோயிலுக்கு சீல் வைத்ததை கண்டித்து அப்பகுதி மக்கள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வீரணம்பட்டி காளியம்மன் கோயிலில் பட்டியலின மக்களை வழிபட எதிர்ப்பு தெரிவித்ததால் கோயிலுக்கு சீல் வைக்கப்பட்டது. திருச்சி செல்லும் சாலையின் குறுக்கே அமர்ந்து கோட்டாட்சியர் புஷ்பாதேவியை கண்டித்து மக்கள் மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.
@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi