Monday, May 6, 2024
Home » கரூர் அருகே அரவக்குறிச்சி நீதிமன்றத்துக்குள் ஊழியர் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை முயற்சி: திடீர் பரபரப்பு

கரூர் அருகே அரவக்குறிச்சி நீதிமன்றத்துக்குள் ஊழியர் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை முயற்சி: திடீர் பரபரப்பு

by Nithya

கரூர்: கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி நீதிமன்றத்துக்குள் நீதிமன்ற ஊழியர் கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில் மருத்துவம் மற்றும் தற்செயல் விடுப்பு வழங்காமல் நிராகரிக்கப்பட்டதாகவும் கடந்த இரண்டு மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை எனவும் ஊழியர் நடராஜன் குறிப்பிட்டிருந்தார். இதனால் மனஉளைச்சலுக்கு ஆளானதால் தற்கொலை முயற்சிக்கு தள்ளப்பட்டதாகவும் தெரிவித்தார். முன்னதாக தற்கொலைக்கு முயன்ற அவரை சக ஊழியர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தஞ்சாவூர் அருகே இளைஞர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த வழக்கில் அவரை வழிப்பறி கொள்ளையர்கள் அடித்து கொன்றது தெரிய வந்துள்ளது. தஞ்சாவூர் அடுத்துள்ள நாஞ்சிக்கோட்டை வடக்கு தெருவை சேர்ந்த பிரகாஷ் என்பவர் இந்த சம்பவத்தில் கொலை செய்யப்பட்டுள்ளார். சிக்கன் கடையில் கிரில் மாஸ்டராக பணிபுரிந்து வந்த பிரகாஷ் கடந்த 16ம் தேதி மதுபோதையில் பணிக்கு சென்றதாக கூறப்படுகிறது. இதையறிந்த வழிப்பறி கொள்ளையர்கள் பிரகாஷை அடுத்து கொன்றுவிட்டு அவரது செல்போன் மற்றும் பைக்கை பறித்து சென்றது தெரியவந்துள்ளது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தமிழ் நீதி, பிரவீன் ஆகிய இரண்டு பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

 

You may also like

Leave a Comment

12 − 8 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi