பெங்களூரு: கர்நாடகாவில் நாங்கள் அளித்துள்ள 5 முக்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற ரூ.50,000 கோடி தேவை என கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்துள்ளார். மோடி அரசால் கர்நாடகம் பெரும் இழப்பை சந்தித்து வருகிறது. ஜிஎஸ்டி மூலம் கிடைக்கும் அதிக வரி ஒன்றிய அரசுக்கே செல்கிறது. கர்நாடகாவுக்கு கிடைக்க வேண்டிய நிதியை பெற பாஜக அரசு எந்த முயற்சியையும் மேற்கொள்ளவில்லை என அவர் தெரிவித்தார்.