கர்நாடகா: கர்நாடகா மாநில அதிமுக செயலாளர் எஸ்.டி.குமார் திடீர் ராஜினாமா செய்துள்ளார். கர்நாடகாவில் மக்களவை தேர்தலில் போட்டியிட அனுமதிக்கவில்லை என்றும் எஸ்.டி.குமார் குற்றசாட்டு வைத்துள்ளார். நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட விருப்பமனு அளித்தும், வாய்ப்பு வழங்கப்படவில்லை. யாரை ஆதரித்து பிரசாரம் செய்வதென்று தெரியாமல் கர்நாடகா அதிமுகவினர் குழப்பம் அடைந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.