கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக சொக்ககிரி மலையில் திடீரென அருவி உருவாகியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. தொடர் மழை காரணமாக ரப்பர் பால் வெட்டும் பணி பாதிக்கப்பட்டுள்ளது.