காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சட்டம் ஒழுங்கு டிஎஸ்பியை புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதிக்கு இடமாற்றம் செய்து, தமிழ்நாடு சட்ட ஒழுங்கு டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். காஞ்சிபுரம் சட்டம் ஒழுங்கு டிஎஸ்பியாக பணியாற்றி வந்த ஜூலியஸ் சீசர், புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதியில் காலிப் பணியிடமாக இருந்த இடத்தில் டிஎஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார். காஞ்சிபுரம் கிரைம் டிஎஸ்பி மணிமேகலை, சட்டம் ஒழுங்கு டிஎஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை தமிழ்நாடு சட்ட ஒழுங்கு டிஜிபி சங்கர் ஜிவால் நேற்று வெளியிட்டிருந்தார்.