சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி மீது வழக்குப்பதிய தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி மறுப்பு தெரிவித்துள்ளார். டி.என்.பி.எஸ்.சி. தலைவர் மற்றும் உறுப்பினர் நியமனம் தொடர்பாக தமிழ்நாடு அரசு அனுப்பிய கோப்புகளையும் திருப்பி அனுப்பினார். நீண்ட நாட்கள் சிறையில் உள்ள கைதிகளை முன் விடுதலை செய்யும் விவகாரத்தில் 71 பேரில் 31 பேரை விடுதலை செய்ய ஆளுநர் ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.