ஓமலூர், ஜூலை 28: ஓமலூர், காடையாம்பட்டி வட்டாரத்தில் உள்ள உயர் நிலைப்பள்ளிகளில் ஜூனியர் ரெட் கிராஸ் துவங்கப்பட்டுள்ளது. இதில், பள்ளி குழந்தைகள் தன்னார்வலர்களாக சேர்ந்துள்ளனர். இந்நிலையில், ஜூனியர் ரெட் கிராஸ் தொண்டர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கும் முகாம் நடந்தது. முகாமில், ஓமலூர், காடையாம்பட்டி, தாரமங்கலம் உள்பட பல்வேறு பகுதிகளில் அவசர காலத்தில் மக்களுக்கு உதவிகள் செய்தல், தொண்டு செய்தல், மக்களுக்கான விழிப்புணர்வு ஏற்படுத்துதல் குறித்த பயிற்சிகள் அளிக்கப்பட்டது. ரத்த தானம் செய்தல், ரத்த தானம் செய்வதற்கான விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்துதல், பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்த்தல் உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்துதல் போன்ற பயிற்சிகள் அளிக்கப்பட்டது. தொடர்ந்து ரெட் கிராஸ் தன்னார்வலர்கள், கிராமங்களுக்கு குழுவாக சென்று, மக்களுக்கு பல்வேறு விழிப்புணர்வை ஏற்படுத்தினர். பயிற்சி பெற்ற பள்ளிக்கு மாணவர்களுக்கு தேவையான பல்வேறு பொருட்கள் வழங்கப்பட்டது. பள்ளி தலைமை ஆசிரியர் சுவாமி பிரசாத் சான்றிதழ் வழங்கினார்.