பணி: பர்சனல் அசிஸ்டென்ட்.
மொத்த காலியிடங்கள்: 323. (பொது-132, பொருளாதார பிற்பட்டோர்-32, ஒபிசி-87, எஸ்சி-48, எஸ்டி-24).
வயது வரம்பு: 18 முதல் 30க்குள். எஸ்சி/எஸ்டி/ஒபிசி/ மாற்றுத்திறனாளிகளுக்கு ஒன்றிய அரசு விதிமுறைப்படி வயது வரம்பு தளர்வு அளிக்கப்படும்.
தகுதி: ஏதாவது ஒரு பாடப்பிரிவில் இளநிலை பட்டப்படிப்பை முடித்து இந்தி அல்லது ஆங்கிலத்தில் நிமிடத்தில் 120 வார்த்தைகளை சுருக்கெழுத்தில் எழுதும் திறன் பெற்றிருக்க வேண்டும். மேலும் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 50 வார்த்தைகள் என்ற வேகத்தில் டைப்பிங் செய்யும் திறன் அல்லது இந்தியில் 65 வார்த்தைகள் என்ற வேகத்தில் டைப்பிங் செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: 7வது ஊதியக் குழு விதிமுறைப்படி வழங்கப்படும்.
யுபிஎஸ்சியால் நடத்தப்படும் எழுத்துத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள், திறன் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர்.
தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, வேலூர் ஆகிய மையங்களில் தேர்வு நடைபெறும்.
கட்டணம்: பொது/ஒபிசி/பொருளாதார பிற்பட்டோருக்கு ரூ.25 மட்டும். பெண்கள்/எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் கிடையாது. கட்டணத்தை ஸ்டேட் வங்கி மூலமாக ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
www.upsconline.nic.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: இன்று (27.03.2024).