Wednesday, May 22, 2024
Home » வேலை இல்லை, வளர்ச்சி இல்லை, சம்பளம் இல்லை, எதுவுமே இல்லை… மோடி ஆட்சி ‘ வேஸ்ட்‘ மன்மோகன்சிங் தான் ‘பெஸ்ட்’

வேலை இல்லை, வளர்ச்சி இல்லை, சம்பளம் இல்லை, எதுவுமே இல்லை… மோடி ஆட்சி ‘ வேஸ்ட்‘ மன்மோகன்சிங் தான் ‘பெஸ்ட்’

by Mahaprabhu

புதுடெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் எம்பி பதவி நேற்றுடன் முடிவுக்கு வந்தது. 1991ம் ஆண்டு முதல் தொடர்ந்து 33 ஆண்டுகள் மாநிலங்களவை எம்பியாக இருந்த அவரின் எம்பி பதவிக்காலம் நேற்று முடிந்தது. இதையடுத்து மன்மோகன்சிங்கிற்கு அனைத்து அரசியல்கட்சி தலைவர்களும் வாழ்த்து தெரிவித்தனர். ஆனால் பா.ஜ தகவல்தொழில்நுட்பத்துறை தலைவர் அமித்மாளவியா மட்டும் மன்மோகன்சிங்கை கடுமையாக விமர்சனம் செய்தார். அவர் தனது எக்ஸ் தளத்தில்,’ மன்மோகன் சிங் 2004-14 க்கு இடையில் பிரதமராக இருந்தபோது இந்தியாவை ஏழையாக்கினார் என்று கூறி பல்வேறு போலி புள்ளி விவரங்களை வெளியிட்டிருந்தார். அவரது டிவிட்டுக்கு காங்கிரஸ் தரப்பில் உடனடியாக பதிலடி கொடுக்கப்பட்டது.

காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம்ரமேஷ் அளித்த பதிலடி வருமாறு: பாஜவின் ட்ரோல் மாஸ்டர் அமித் மாளவியா, இன்று அபத்தம் நிறைந்த, தீங்கிழைக்கும் வஞ்சகத்தின் புதிய உச்சத்தை எட்டியுள்ளார். புள்ளி விவரங்களில் பொய் சொல்வதில் அவர் பெயர் பெற்றவர். ஆனால் இன்று அவர் பொய்யில் ஒரு புதிய புள்ளிவிவரத்தை கண்டுபிடிக்க முடிவு செய்துள்ளார். 33 ஆண்டுகள் பொதுப் பணியில் இருந்து மன்மோகன் சிங் இன்று ஓய்வு பெறுகிறார். அவரிடம் கொஞ்சம் கூட மரியாதை காட்டாமல், ஒரு சிறு கண்ணியத்தைக் காட்டாமல், அமித் மாளவியா அவதூறாக பேசியுள்ளார். நவீன இந்தியாவை உருவாக்குவதில் மன்மோகன் சிங்கின் பங்களிப்பை மோடியோ அல்லது மாளவியாவோ தொலைவில் கூட அணுக முடியாது. அவர் கொஞ்சம் பேசுபவர். ஆனால் அதிகம் சாதிப்பவர்.

அவர் ஒருபோதும் பெருமை, சுயநலத்தில் ஈடுபடாத மனிதர். அவரது பெருமையை கூட மற்றவர்களுக்கு பகிர்ந்து அளிப்பவர். விமர்சகர்கள் மற்றும் எதிர்ப்பாளர்களுக்கு கூட உரிய மரியாதை அளிப்பவர். அவர் எளிமை, சிக்கனம், நேர்மை ஆகியவற்றின் சின்னம். அமித்மாளவியாவின் அதீத கற்பனையில் இருந்து உருவான இந்த முட்டாள்தனமான பொய்களுக்குப் பதிலாக, ஐஎம்எப் தரவுகளின் அடிப்படையில் தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் எளிமையான மற்றும் எளிமையான உண்மைகள் இங்கே உள்ளன. 12004-2014 வரை, இந்தியாவின் ஜிடிபி 635 டாலரிலிருந்து 1,000 டாலராக இருந்தது. இது 145 சதவீத வளர்ச்சி. மோடி ஆட்சியில் 2014-2024 வரை, இந்தியாவின் பெயரளவிலான தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி 1,560 அமெரிக்க டாலரிலிருந்து 2,850 அமெரிக்க டாலராக உள்ளது. இது 82 சதவீத வளர்ச்சி.

2 இந்தியாவின் மொத்த ஜிடிபி 7.5 சதவீத வளர்ச்சியுடன் மன்மோகன்சிங் ஆட்சியில் பணவீக்கத்துடன் சரி செய்யப்பட்டது. ஆனால் மோடியின் ஆட்சியில் வெறும் 5.8 சதவிகிதம் மட்டுமே உள்ளது.

3 மன்மோகன் சிங்கின் 10 ஆண்டுகால ஆட்சியானது இந்தியாவின் பொருளாதாரத்தையும், சமூகத்தையும் சிறப்பாக மாற்றியது. ஏழை, எளிய மக்களின், தொழிலாளர்களின் சம்பளம் உயர்ந்தது. ஆனால் மோடி ஆட்சியில் பணவீக்கம் அதிகரித்துள்ளது.

4 27 கோடி மக்கள் வறுமையில் இருந்து மீட்கப்பட்டனர். மகாத்மாகாந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டம் மற்றும் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் போன்ற சட்டங்கள் இந்திய மக்களுக்கு உயிர்நாடியாக இருந்தது. ஆனால் வறுமை, பணமதிப்பு நீக்கம், கொரோனா தொற்று போன்றவற்றால் மோடியின் தவறான நிர்வாகத்தில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து உள்ளது.

5 மன்மோகன் ஆட்சியில் திறனற்ற தொழிலாளர்கள் சம்பள உயர்வு 285 சதவீதம் அதிகரித்தது. ஆனால் மோடி ஆட்சியில் அவர்களின் சம்பளம் வெறும் 60 சதவீதம் மட்டுமே உயர்ந்துள்ளது.

6 நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதாரவிலை மன்மோகன்சிங் ஆட்சியில் 140 சதவீதம் உயர்த்தப்பட்டது. விவசாய விரோதி பாஜ ஆட்சியில் வெறும் 55 சதவீதம் மட்டுமே உயர்ந்துள்ளது.

7 மன்மோகன்சிங் ஆட்சியில் அன்னிய நேரடி முதலீடு 0.8 சதவீதத்திலிருந்து 1.7 சதவீதமாக உயர்ந்து இரட்டிப்பாகியுள்ளது. மோடியின் ஆட்சியில் வெறும் 1.5 சதவீதமாக குறைந்துள்ளது.

8 மன்மோகன்சிங் ஆட்சியில் ஏற்றுமதி 320 சதவீதம் வளர்ச்சி அடைந்தது. ஆனால் மோடியின் கடந்த 10 ஆண்டு ஆட்சியில் வெறும் 50 சதவீதம் மட்டுமே வளர்ச்சி அடைந்துள்ளது.

9 வளர்ச்சி என்பது மக்கள் விவசாயம் மற்றும் நிலையற்ற சுயவேலைவாய்ப்பில் இருந்து தொழிற்சாலைகள் மற்றும் நிலையான, சம்பளம் பெறும் வேலைகளுக்கு மாறுவதன் மூலம் வரையறுக்கப்படுகிறது. மன்மோகன்சிங் விவசாயத்தில் இருந்து ஒரு நிலையான வேலை நோக்கி சாதனை மாற்றத்தை மேற்கொண்டார். ஆனால் மோடியின் ஆட்சியில் விவசாய கூலி வேலை செய்யும் மக்களின் எண்ணிக்கையில் முன்னோடியில்லாத அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

10 மன்மோகன் சிங் ஆட்சியின் கீழ், அனைத்து துறைகளிலும் சம்பளம் பெறும் தொழிலாளர்கள் சதவீதம் 18.5 சதவீதத்திலிருந்து 23 சதவீதமாக அதிகரித்தது. அதே நேரத்தில் சுய வேலைவாய்ப்பு 55 சதவீதத்திலிருந்து 51 சதவீதமாக குறைந்தது. ஆனால் மோடியின் ஆட்சி இதற்கு நேர்மாறானது. சம்பளம் பெறும் தொழிலாளர்கள் 23 சதவீதத்தில் இருந்து 21 சதவீதமாக குறைந்துள்ளனர். அதே நேரத்தில் சுயதொழில் செய்பவர்கள் எண்ணிக்கை 51 சதவீதத்தில் இருந்து 57 சதவீதமாக அதிகரித்துள்ளது. இந்த 10 புள்ளிவிவரங்களிலும் ஒவ்வொரு அளவுகோலிலும், கடந்த 10 ஆண்டுகள் நமது பொருளாதாரத்திற்கு ஒரு இருண்ட தசாப்தமாக உள்ளது. இந்திய மக்களும் அவர்களின் தனிப்பட்ட துயரக் கதைகளும் இதற்குச் சான்றாகும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

You may also like

Leave a Comment

5 × one =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi