சென்னை: கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் 2014ம் ஆண்டு வெளியான படம் ‘ஜிகர்தண்டா’. சித்தார்த், பாபி சிம்ஹா, லட்சுமி மேனன் நடித்திருந்தார்கள். இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இதன் இரண்டாம் பாகத்தை தனது ஸ்டோன் பென்ஞ் பிலிம்ஸ் மூலம் தயாரித்து இயக்குகிறார் கார்த்திக் சுப்புராஜ். இதில் ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா நடிக்கிறார்கள்.
மற்ற நடிகர் நடிகைகள் பற்றி இதுவரை அறிவிக்கவில்லை. திரு ஒளிப்பதிவு செய்கிறார். சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு நேற்று தொடங்கியது. தொடங்கிய அன்றே படம் வருகிற தீபாவளி அன்று (நவம்பர், 12) வெளியாகும் என்று அறிவித்திருக்கிறார்கள். ‘‘ஜிகர்தண்டாவைப் போலவே இந்தப் படமும் ஆக்ஷன் கேங்ஸ்டர் கதையமைப்பில் உருவாகிறது’’ என்கிறார் கார்த்திக் சுப்புராஜ்.