சென்னை: ஜே.இ.இ. முதன்மை தேர்வில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர் முகுந்த் பிரதீஷ், அகில இந்திய தரவரிசையில் முதலிடம் பெற்றுள்ளார். பாளையங்கோட்டை தனியார் பள்ளியைச் சேர்ந்த மாணவர் முகுந்த் பிரதீஷ் 300-க்கு 300 மதிப்பெண் பெற்று முதலிடம் பெற்றார். அகில இந்திய தரவரிசையில் 23 மாணவர்களில் ஒருவராக சாதனை புரிந்த தமிழ்நாடு மாணவருக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.