மதுரை: ஜல் ஜீவன் திட்ட குடிநீர் இணைப்புகளுக்கு பணம் பெற்று மோசடி செய்ததாக ஊராட்சி தலைவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. திருச்சி மாவட்ட ஆட்சியர் நடத்திய விசாரணை குறித்த நிலை அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. திருச்சியைச் சேர்ந்த பெரியசாமி என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.