Sunday, May 19, 2024
Home » சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் மீதான வழக்கு விசாரணைக்கு தடை: ஐகோர்ட் உத்தரவு

சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் மீதான வழக்கு விசாரணைக்கு தடை: ஐகோர்ட் உத்தரவு

by Nithya

சேலம்: சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் மீதான வழக்கு விசாரணைக்கு ஐகோர்ட் தடை விதித்துள்ளது. சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன், விதிகளை மீறி, அரசு அனுமதி பெறாமல், பல்கலைகழகத்தின் பல்வேறு பணிகளை மேற்கொள்வதற்காக, சொந்தமாக பெரியார் பல்கலைகழக தொழில்நுட்ப தொழில்முனைவோர் மற்றும் ஆராய்ச்சி பவுண்டேசன் என்ற அமைப்பை தொடங்கினார். அதற்காக அரசு நிதியை பயன்படுத்தியதுடன், பல்கலைக்கழக அதிகாரிகளைக் கொண்டே அந்த நிறுவனத்தை செயல்படச் செய்து ஊழல் செய்ததாக பல்கலைகழகத்தின் ஊழியர் சங்கத்தினர் காவல்துறையில் புகார் அளித்திருந்தனர். அதேபோல ஜாதிப்பெயரை குறிப்பிட்டு திட்டியதாக துணைவேந்தருக்கு எதிராக புகார் அளிக்கப்பட்டது.

இந்த புகார்களின் அடிப்படையில், இந்திய தண்டனைச் சட்டம், வன்கொடுமை தடுப்புச் சட்டப் பிரிவுகளின் கீழ் காவல் நிலையத்தினர் வழக்குப்பதிவு செய்து துணைவேந்தர் ஜெகநாதனை கைது செய்தனர். இதனையடுத்து, இது தொடர்பாக சேலம் நீதிமன்றம் ஜெகநாதனுக்கு ஜாமீன் வழங்கியது. இதனை எதிர்த்து காவல்துறை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அதேநேரம், தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி, துணை வேந்தர் ஜெகநாதன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அதில், சேலம் பெரியார் பல்கலைகழக துணைவேந்தர் ஜெகநாதன் மீதான வழக்கு விசாரணைக்கு தடை விதித்து நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டுள்ளார்

ஆவணங்களை சரிபார்த்ததில் ஜெகநாதனின் நடவடிக்கைகளில் குற்ற நோக்கம் இருப்பதாக தெரியவில்லை என தனது உத்தரவில் கருத்து நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் வழக்கின் விசாரணை 4 வாரங்களுக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார். முன்னதாக வழக்கு விசாரணைக்கு அரசு தலைமை வழக்கறிஞர் ஆஜராகி வாதிட இருப்பதாக கூறி வழக்கின் விசாரணை தள்ளிவைக்க அரசு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. எனினும் வழக்கைத் தள்ளி வைக்க முன்வைக்கப்பட்ட கோரிக்கை ஏற்க மறுத்து, தடையை நீக்க வேண்டும் என்றால் தடை நீக்க கோரி தனி மனு தாக்கல் செய்ய காவல்துறைக்கு நீதிபதி அறிவுறுத்தியுள்ளார்.

 

You may also like

Leave a Comment

3 + 15 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi