இஸ்ரேல் நாட்டில் யூதர்களின் கூடாரத் திருவிழாவின் ஒரு பகுதியாக நடைபெற்ற பேரணியில் உள்ளூர் மட்டுமின்றி வெளிநாடுகளை சேந்தவர்களும் கலந்து கொண்டனர். யூதர்கள் பாலைவனத்தில் வாழ்ந்த காலத்தை நினைவு கூறும் வகையில் கூடாரவிழா அரங்கேறி வருகிறது. இது இலையுதிர் கால அறுவடை திருவிழாவாகவும் கொண்டாடப்படுகிறது. இதற்காக இஸ்ரேலில் 7 நாட்கள் பொதுவிடுமுறையும் வழங்கப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக ஜெருசலேமில் நடைபெற்ற பேரணியில் திரளானோர் கலந்து கொண்டனர்.