சென்னை: ஐபிஎஸ் அதிகாரிகள் 5 பேரை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. 2 ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. பொள்ளாச்சி ஏ.எஸ்.பி. எஸ்.பிருந்தா, பதவி உயர்வுடன் சேலம் நகர கூடுதல் ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டார். தமிழ்நாடு சிறப்பு பட்டாலியன் மதுரை கமாண்டன்ட்டாக பாஸ்கரனை தமிழ்நாடு அரசு நியமித்துள்ளது. தாம்பரம் சட்டம், ஒழுங்கு துணை ஆணையராக கவுதம் கோயல் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.