சென்னை: கிரிக்கெட் வீரர் தோனி குறித்து கருத்து தெரிவித்ததற்காக ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமாருக்கு விதித்த தண்டனை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமார் மீதான நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. ஐ.பி.எஸ். அதிகாரியின் மேல்முறையீட்டு வழக்கில் தோனி பதில் அளிக்க நீதிபதிகள் அபய் ஓகா, உஜ்ஜல் புய்யன் உத்தரவு.