சென்னை: சர்வதேச தரத்திற்கு நிகராக நாட்டில் ரயில் பாதைகள், 6 மற்றும் 8 வழிச்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளதாக ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். சென்னை காட்டாங்கொளத்தூர் எஸ்.ஆர்.எம். அறிவியல் தொழில்நுட்ப கல்லூரி பட்டமளிப்பு விழாவில் பேசிய அவர், வந்தேபாரத் ரயில் சிறந்த சேவையை மக்களுக்கு வழங்குகிறது. 20 ஆண்டுகளுக்கு முன் இருந்ததைவிட பல்வேறு துறைகளில் அடிப்படை கட்டமைப்பு மேம்படுத்தப்ட்டுள்ளது என்று கூறினார்.