தமிழ்நாட்டின் இளைஞர்கள் முன்பெல்லாம் வேலைவாய்ப்புகளை தேடி மும்பை, சென்னை, கோவை என மாநகரங்களுக்கு ஓடோடி செல்லும் அவலம் நிலவியது. அந்த நிலையை மாற்றி திமுக அரசு தற்போது வேலைவாய்ப்புகளை அந்தந்த உள்ளூர் பகுதிகளிலேயே பெற வேண்டும் என்ற எண்ணத்தோடு, பல்வேறு திட்டங்களை செயலாக்கம் செய்து வருகிறது. சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடந்தபோது, அதன் மூலம் 26 லட்சத்து 90 ஆயிரம் பேருக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்புகளை பெறும் வகையில், உலகளாவிய நிறுவனங்களோடு 631 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டன.
இம்மாநாட்டில் மின்சார வாகனங்கள் உற்பத்தி மற்றும் விற்பனையில் ஈடுபட்டுள்ள வியட்நாமை சேர்ந்த வின்ஃபாஸ்ட் ஆட்டோ நிறுவனம் தமிழ்நாட்டில் மின்வாகன உற்பத்திக்கு ரூ,16 ஆயிரம் கோடி முதலீடு செய்ய புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தது. கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் எல்லாம் ஆட்சியாளர்கள் புரிந்து கொள்ளக்கூடிய ஒப்பந்தங்களாகவே இருந்தன. ஆனால் தற்போது ஒப்பந்தங்களில் கையெழுத்திட்ட மை காய்வதற்குள் பணிகள் தொடங்குகிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின் எடுத்த நடவடிக்கையின் பேரில், வின்ஃபாஸ்ட் நிறுவனத்தின் மின்வாகன உற்பத்தி ஆலைக்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று தூத்துக்குடியில் கோலாகலமாக நடந்தேறியது.
அதாவது புரிந்துணர்வு ஒப்பந்தம் ேபாடப்பட்ட 50 நாட்களுக்குள் அதற்குரிய பணிகள் தொடங்கப்பட்டது, வேலைநாடுநர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. த்துக்குடி சிப்காட்டில் அமைக்கப்பட உள்ள இந்த ஆலை முதற்கட்டமாக ரூ,4 ஆயிரம் கோடி முதலீட்டில் 3500 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் அளிக்கும் வகையில் அமைகிறது. இந்த ஆலை மூலம் ஓராண்டிற்கு ஒரு லட்சத்து 50 ஆயிரம் வாகனங்கள் உற்பத்தி செய்யப்பட உள்ளது. இந்த தொழிற்சாலை தென்தமிழகத்தில் வாகன உற்பத்திக்கான மிகப் பெரிய முதலீடாகும். இதுமட்டுமின்றி நெல்லை மாவட்டம் கங்கைகொண்டானில் டாடா பவர் நிறுவனம் ரூ,2800 கோடி முதலீட்டில் தொழிற்சாலை அமைத்துள்ளது.
மேலும் சிங்கப்பூர் செம்கார்ப் நிறுவனம் ரூ,36 ஆயிரம் கோடியிலும், மலேசியா பெட்ரோதாஸ் நிறுவனம் ரூ,30 ஆயிரம் கோடியிலும் தூத்துக்குடியில் தொழிற்சாலைகளை அமைக்க உள்ளன. ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் கிட்டும் என்பதால் தென்மாவட்ட மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். மிழ்நாடு அரசின் சமீபகாலமாக திட்டங்கள் மாவட்டங்கள் தோறும் வளர்ச்சி என்பதை மையமாக கொண்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
தொழில் முதலீட்டாளர்களும், வேலைநாடுநர்களும் சென்னையை நோக்கி படையெடுப்பதை தவிர்க்க இப்போது அரசு எடுத்துவரும் நடவடிக்கைகள் மக்கள் மத்தியில் பாராட்டை பெற்றுள்ளது. தமிழ்நாட்டின் பல்வேறு நகரங்களிலும் சமீபகாலமாக மென்பொருள் பூங்காக்கள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. இதன்மூலம் ஐடி துறையில் சாதிக்க விரும்பும் இளைஞர்கள், உள்ளூர் பகுதியிலேயே வேலைவாய்ப்புகளை பெற முடிகிறது. தமிழ்நாட்டில் இன்று முதலீடுகள் செய்வதற்கு சாதகமான சூழல்கள் நிலவுவதால், உலகளாவிய தொழில் முதலீட்டாளர்களும் தமிழக நகரங்களை தேடி வருகின்றனர்.
தொழில் முனைவோருக்கு தேவையான சேவைகளை அரசும் விரைவாக வழங்கி வருகிறது. இந்தியாவின் ஆட்டோ ஹப் என அழைக்கப்படும் தமிழகத்தில், இப்போது மின்வாகன பொருட்கள் உற்பத்தி வேகமாக நடந்து வருகிறது. அதற்கான அனைத்து வசதிகளும் இங்கு கிடைத்து வருவதும் குறிப்பிடத்தக்கது. இந்தியாவிலே 2வது பெரிய பொருளாதார மாநிலம் தமிழ்நாடு என்பதில் நாம் பெருமை கொள்வோம்.