டெல்லி: இந்திய மல்யுத்த சம்மேளன கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷனுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டது. மல்யுத்த வீராங்கனைகள் அளித்த பாலியல் புகார் குறித்த வழக்கில் ரோஸ் அவென்யூ நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. பிரிஜ் பூஷன் சிங் ரூ.25,000 பிணைத் தொகையாக கட்டவும் டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.