சென்னை: இந்திய கடல்சார் பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு பட்டங்களை வழங்கினார். பல்கலைக்கழகத்தின் 8வது பட்டமளிப்பு விழாவில் 245 மாணவர்களுக்கு ஜனாதிபதி முர்மு பட்டங்களை வழங்கினார். பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் ரவி, ஒன்றிய அமைச்சர் சர்பானந்தா சோனாவல், அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டனர்.