Wednesday, May 15, 2024
Home » 2047ம் ஆண்டிலும் கூட இந்தியா பணக்கார நாடாக திகழ்வதற்கு சாத்தியமில்லை: ரகுராம் ராஜன் திட்டவட்டம்

2047ம் ஆண்டிலும் கூட இந்தியா பணக்கார நாடாக திகழ்வதற்கு சாத்தியமில்லை: ரகுராம் ராஜன் திட்டவட்டம்

by Ranjith

ஐதராபாத்: நாட்டில் படித்தவர்கள் அனைவருக்கும் வேலை வாய்ப்பு வழங்குவதற்கு, தற்போதைய வளர்ச்சி விகிதம் போதுமானதல்ல. இதே நிலை நீடித்தால் 2047ம் ஆண்டு வரை இந்தியா பணக்காராக நாடாக திகழ்வதற்கு சாத்திமில்லை என, ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் கூறினார். ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன், ஐதராபாத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசியதாவது: வரும் 2047ம் ஆண்டுக்குள் மக்கள் தொகை அதிகரிப்பு இல்லாமல் சாத்தியமான வளர்ச்சி விகிதம் ஆண்டுதோறும் 6 சதவீதமாக தொடர்ந்தால், இந்தியா இன்னும் குறைந்த நடுத்தர பொருளாதாரமாக இருக்கும்.

நாடு வேகமாக வளரவில்லை என்றால்,அது பணக்காரர் ஆவதற்குள் (மக்கள்தொகை அடிப்படையில்) முதிர்ச்சியடையும், அதாவது வயதான மக்கள்தொகையின் சுமையை அந்த நேரத்தில் சமாளிக்க வேண்டியிருக்கும். கடந்த இரண்டு காலாண்டுகளில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 7.5 சதவீதமாக உள்ளது. பொருளாதாரத்தில் தொழிலாளர்களின் பங்கெடுப்பை பார்க்கும்போது இது குறைவுதான். அதிலும், பெண்களின் பங்களிப்பை கணக்கில் எடுத்துக் கொண்டால், ஜி-20 நாடுகளிலேயே இது குறைவாக உள்ளது.

இன்றைய வளர்ச்சியை வைத்து கணக்கிடும்போது, ஆண்டுக்கு 6 சதவீதம் வீதம் பொருளாதாரம் வளர்ந்தால், ஒவ்வொரு 12 ஆண்டுக்கும் இரட்டிப்பாவும். எனவே, 24 ஆண்டுகளில், தனிநபர் வருவாய் 4 மடங்கு அதிகமாக இருக்கும். அதாவது, இந்தியாவில் தற்போது தனிநபர் வருவாய் ரூ.2 லட்சத்துக்கும் சற்று குறைவாக உள்ளது. எதிர்காலத்தில் இது ரூ.8 லட்சமாக இருக்கும். தற்போதைய நிலையை வைத்து கணிக்கும்போது, மக்கள் தொகையும் அதிகமாமல் இருந்தால் கூட, 2047 வரை இந்தியா குறைந்த நடுத்தர வருவாய் கொண்ட நாடாக இருக்கும்; பணக்கார நாடாக சாத்தியமில்லை.

இவ்வாறு ரகுராம் ராஜன் கூறினார். இதுபோல், செய்தி நிறுவனம் ஒன்றுக்குக்கு பேட்டியளித்த ரகுராம் ராஜன், ‘‘விமர்சனங்கள், கருத்துக்களுக்கு பதிலடி கொடுக்க வேண்டுமே தவிர அவர்களுடைய நோக்கங்களை தாக்கக்கூடாது. நாட்டின் முன்னேற்றத்திற்கு எல்லாம் அறிந்த விஷ்வ குருவை போல் பிரசங்கம் செய்வதை விட காது கொடுத்து கேட்க வேண்டும்.தேசிய ஒருமைப்பாடு மற்றும் அன்பு ஆகியவற்றில் மிகுந்த நம்பிக்கை உள்ளவன். ஆனால்,எந்த வெறுப்பும் கிடையாது. அந்த அடிப்படையில்தான்,ராகுல் காந்தியின் பாரத் ஒற்றுமை நடைபயணத்தில் பங்கேற்றேன்’’ என்றார்.

You may also like

Leave a Comment

2 × 3 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi