இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கான பயிற்சி தொடங்கி உள்ளது. பாகிஸ்தான் நாடாளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 8ம் தேதி தேர்தல் நடைபெறும் என அந்நாட்டு தேர்தல் ஆணையம் நேற்று முன்தினம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வௌியிட்டது. டிசம்பர் 20 முதல் 22 வரை வேட்பு மனு தாக்கல் நடைபெற்று, 23ம் தேதி இறுதிப் பட்டியல் வௌியிடப்படும்.
டிசம்பர் 24ம் தேதி முதல் 30ம் தேதி வரை வேட்பாளர்களின் மனுக்கள் ஆய்வு செய்யப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் தேர்தல் அதிகாரிகள், அலுவலகர்களுக்கு 3 நாள் பயிற்சி முகாம் நேற்று தொடங்கியது. 19ம் தேதி(நாளை) நிறைவடையும் இந்த பயிற்சி முகாமில் நாடு முழுவதுமுள்ள 859 தேர்தல் அலுவலகர்கள், 144 அதிகாரிகள் இந்த பயிற்சி முகாமில் பங்கேற்றுள்ளனர்.