பனாஜி : உலக அரங்கில் எரிசக்தி துறையில் இந்தியா முன்னேறியுள்ளதாக கோவாவில் நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மேலும் அவர் பேசுகையில், “அதிகரிக்கும் எரிசக்தி தேவைகளுக்கு மத்தியில் மலிவு விலையில் இந்தியா பெட்ரோல், டீசலை வழங்கி வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்தியா 100% மின்சார தேவையை பூர்த்திசெய்துள்ளது. 21-ம் நூற்றாண்டு நவீன கட்டமைப்புக்காக இந்த நிதியாண்டில் மட்டும் சுமார் ரூ.10 லட்சம் கோடி இந்தியா முதலீடு செய்துள்ளது,”இவ்வாறு தெரிவித்தார்.